உண்மை எது

பில் கலெக்டர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-09-08 09:16 GMT   |   Update On 2023-09-08 09:16 GMT
  • கடன் தொல்லையால்பில் கலெக்டர் விஷம் குடித்து தற்கொலை
  • மாநகராட்சி ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி 

திருச்சி அரியமங்கலம் கலைவாணர் தெரு சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகன் கணேஷ் (வயது 34) இவர் திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மணிமேகலை என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கணேஷ் பல இடங்களில் கடன் வாங்கியதாக தெரிகிறது.

இதனால் கடன் பணத்தை திருப்பி கட்ட முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மதியம் பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்ற கணேசன் திடீரென்று வாந்தி எடுத்து உள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி மணிமேகலை அதிர்ச்சி அடைந்து அவரிடம் விசாரித்த போது மன உளைச்சலில் எலி மருந்தை தின்று விட்டதாக கணேஷ் கூறினார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சிடைந்த மணிமேகலை கணேசனை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பெற்ற கணேசன் சில மணி நேரத்தில் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் விஷம் குடித்து இறந்த சம்பவம் திருச்சி மாநகராட்சி ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News