உண்மை எது

ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பிஎன்பி - வைரல் தகவலை நம்ப வேண்டாம்!

Published On 2023-04-26 09:00 GMT   |   Update On 2023-04-26 09:00 GMT
  • இணைய முகவரியை கிளிக் செய்யும் பட்சத்தில் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும்.
  • இணைய முகவரியில் உள்ள வலைதளம் பார்க்க பஞ்சாப் நேஷனல் வங்கி வலைதளம் போன்றே காட்சியளிக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) சார்பில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுவதாக கூறும் தகவல் வாட்ஸ்அப்-இல் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆண்டு விழா கொண்டாட்டங்களின் அங்கமாக உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று வைரல் தகவலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வைரல் குறுந்தகவலுடன் இணைய முகவரி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

வைரல் தகவலில் உள்ள இணைய முகவரியை கிளிக் செய்யும் பட்சத்தில் பயனர்கள் தங்களின் டேட்டா, பணம் அல்லது மிகமுக்கிய தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும். பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ சார்பில் வைரல் தகவலில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

வாட்ஸ்அப் குறுந்தகவல் பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், அதில் துளியும் உண்மையில்லை. முற்றிலும் புதிய பஞ்சாப் நேஷனல் வங்கி விளம்பர யுக்தியின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ. 6 ஆயிரம் வரை வென்றிட முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 130-வது ஆண்டு விழாவை கொண்டாடுவதால், அரசாங்கம் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுவதாக குறிப்பிடப்பபட்டுள்ளது.

இந்த தகவலுடன் இணைக்கப்பட்டு இருக்கும் இணைய முகவரியில் உள்ள வலைதளம் பார்க்க பஞ்சாப் நேஷனல் வங்கி வலைதளம் போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில், பயனர் போலி இணைய முகவரியை க்ளிக் செய்யும் பட்சத்தில் பணம், தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்-இல் நீங்கள் சேமிக்காத எண்ணில் இருந்து வரும் குறுந்தகவல்களை பிளாக் மற்றும் ரிப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றை பிளாக் செய்யும் பட்சத்தில் இதுபோன்ற குறுந்தகவல்கள் இதே எண்ணில் இருந்து மீண்டும் வராது.

Tags:    

Similar News