செய்திகள்

தொகுதி மக்களுடன் எப்போதும் இருப்பேன் - ஈரா.மகேந்திரன்

Published On 2019-04-10 09:08 GMT   |   Update On 2019-04-10 09:08 GMT
நாம் தமிழர் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் ஈரா. மகேந்திரன் ஆலந்தூர், ஆதம்பாக்கம் -பரங்கிமலை கண்டோன்மென்ட். உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். #NaamThamizharKatchi #LokSabhaElections2019

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் ஈரா. மகேந்திரன் ஆலந்தூர், ஆதம்பாக்கம் -பரங்கிமலை கண்டோன்மென்ட். உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

ஆலந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவுவதாக அப்பகுதி மக்கள் மகேந்திரனிடம் தெரிவித்தனர். அப்போது பொதுமக்கள், நீங்களும் மற்ற வேட்பாளர்களை போல இருக்காமல் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதற்கு பதில் அளித்த மகேந்திரன் நான் எப்போதும் உங்களுடனேயே இருப்பேன் என்று உறுதி அளித்தார். ஆலந்தூர் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளுக்கு தனியார் நிறுவனங்களே காரணம் என்று குற்றம் சாட்டினார்.

இந்த நிறுவனங்கள் குடிநீரை விற்பனை செய்வதால் மக்களின் அடிப்படை பிரச்சினையான தண்ணீருக்காக மக்கள் தவிக்கும் நிலையே உள்ளது. இந்த நிலைமாற நட வடிக்கை எடுப்பேன் என்றார். #NaamThamizharKatchi #LokSabhaElections2019

Tags:    

Similar News