செய்திகள்
‘சின்ன வீடாக’ நடித்த என்னை ஞாபகம் இருக்கா? - தொண்டர்களை கலாய்த்த நடிகை பபிதா
கரூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகை பபிதா பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019
கரூர்:
கரூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகை பபிதா பிரசாரம் செய்தார். வாங்கல் பகுதியில் அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா தந்த திட்டங்களை நிப்பாட்டிடு வாங்க. அவங்களுக்கு (குடும்பத்துக்கு) பயன்படும் திட்டங்களா கொண்டு வருவாங்க. தி.மு.க. இத்தனை முறை ஆட்சியில் இருந்தும் ஏதாவது திட்டத்தை முறையாக செயல்படுத்தினார்களா?
ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சத்துணவு திட்டம், வீடு இல்லாதவர்களுக்கு பசுமை வீடுகள், முதியோர் உதவித் தொகை, அம்மா உணவகம், மருந்தகம், 20 கிலோ ரேசன் அரிசி போன்ற பல்வேறு திட்டங்கள் முறையாக இன்றைக்கும் செயல்படுத்தப்படுகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அவர்களின் குடும்பம் முன்னேறும். அ.தி.மு.க. ஆட்சி நீடித்தால் ஏழை, எளிய மக்களின் வாழ்வு வளம்பெறும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தவரை அவர்களை கருணாநிதியால் எதிர்கொள்ள இயலவில்லை என்றார்.
பின்னர் அவர் பேசும்போது, எனது தந்தை பல படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளார். என்னை ஞாபகம் இருக்கிறதா? என்று மக்களிடம் கேட்ட அவர், பாக்கியராஜ் படத்தில் அவருக்கு சின்ன வீடாக வருவேன் என்றார்.
தொடர்ந்து, அங்கு நின்ற முதியவரை பார்த்து, சின்ன வீடு என்றதும் பெரியவர் எப்படி சிரிக்கிறார் பாருங்கள். சின்ன வீடாக நடித்துள்ளேன். மற்றபடி நிஜ சின்ன வீடு கிடையாது என தொண்டர்களை பார்த்து கலாய்த்தார். #LokSabhaElections2019
கரூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகை பபிதா பிரசாரம் செய்தார். வாங்கல் பகுதியில் அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா தந்த திட்டங்களை நிப்பாட்டிடு வாங்க. அவங்களுக்கு (குடும்பத்துக்கு) பயன்படும் திட்டங்களா கொண்டு வருவாங்க. தி.மு.க. இத்தனை முறை ஆட்சியில் இருந்தும் ஏதாவது திட்டத்தை முறையாக செயல்படுத்தினார்களா?
ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சத்துணவு திட்டம், வீடு இல்லாதவர்களுக்கு பசுமை வீடுகள், முதியோர் உதவித் தொகை, அம்மா உணவகம், மருந்தகம், 20 கிலோ ரேசன் அரிசி போன்ற பல்வேறு திட்டங்கள் முறையாக இன்றைக்கும் செயல்படுத்தப்படுகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அவர்களின் குடும்பம் முன்னேறும். அ.தி.மு.க. ஆட்சி நீடித்தால் ஏழை, எளிய மக்களின் வாழ்வு வளம்பெறும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தவரை அவர்களை கருணாநிதியால் எதிர்கொள்ள இயலவில்லை என்றார்.
பின்னர் அவர் பேசும்போது, எனது தந்தை பல படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளார். என்னை ஞாபகம் இருக்கிறதா? என்று மக்களிடம் கேட்ட அவர், பாக்கியராஜ் படத்தில் அவருக்கு சின்ன வீடாக வருவேன் என்றார்.
தொடர்ந்து, அங்கு நின்ற முதியவரை பார்த்து, சின்ன வீடு என்றதும் பெரியவர் எப்படி சிரிக்கிறார் பாருங்கள். சின்ன வீடாக நடித்துள்ளேன். மற்றபடி நிஜ சின்ன வீடு கிடையாது என தொண்டர்களை பார்த்து கலாய்த்தார். #LokSabhaElections2019