செய்திகள்
தங்கம் கொண்டுவரப்பட்ட வேன்.

மதுரையில் இன்று 40 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

Published On 2019-03-20 07:05 GMT   |   Update On 2019-03-20 07:05 GMT
மதுரையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று நடத்திய வாகன சோதனையில் 40 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls

மதுரை:

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் மேலூர் சுங்கச்சாவடியில் நேற்று வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.64 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் பறிமுதல் செய்யப்பட்டது.


இதேபோல் திருமங்கலம் பகுதியில் ஏ.டி.எம்.களுக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.1¼ கோடி பறமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை வாடிப்பட்டியில் 40 கிலோ தங்க நகைகளுடன் வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சமயநல்லூர் பகுதியில் கைப்பற்றினர். அவை எங்கிருந்து வருகிறது? யாருக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.  #Parliamentelection #LSPolls

Tags:    

Similar News