உள்ளூர் செய்திகள்

மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க சேலம் மாவட்ட அணி வீரர்களை கைப்பந்து கழக மாவட்ட தலைவர் ராஜ்குமார் வழி அனுப்பி வைத்த காட்சி.

ஈரோட்டில் நடைபெறும் மண்டல அளவிலான கைப்பந்து போட்டி

Published On 2022-06-30 10:09 GMT   |   Update On 2022-06-30 10:09 GMT
  • ஈரோட்டில் நடைபெறும் மண்டல அளவிலான கைப்பந்து போட்டிக்கு செல்லும்சேலம் வீரர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.
  • ஈரோடு மாவட்டம் நம்பியூரில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் கோவை மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடக்கிறது.

சேலம்:

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் கோவை மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடக்கிறது. இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து கலந்துகொள்ளும் வீரர்களுக்கு வழியனுப்பு விழா நேற்று சேலத்தில் நடந்தது.

சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் வரவேற்று பேசினார்.

தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி, வீரர்களுக்கு பயணப்படி மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினார். இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் அகிலாதேவி, ராஜாராம் இணைச் செயலாளர் வடிவேல், தொழிலதிபர் விஜயராஜ், வளர்ச்சி குழு தலைவர் வேங்கையன், நிர்வாகி நந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News