உள்ளூர் செய்திகள்

மீன் பிடித்தபோது ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2022-11-20 12:27 IST   |   Update On 2022-11-20 12:27:00 IST
  • சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி மணி பரிதாபமாக இறந்தார்.
  • திருப்பாலைவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த அகரம் ஊராட்சிக்குட்பட்ட உப்பு நெல்வாயல் ஏரியில் அதே பகுதியைச் சேர்ந்த மணி (வயது 23) மற்றும் அவரது உறவினரான அருள் ஆகியோர் மீன் பிடித்தனர்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற போது ஏரி பள்ளத்தில் மணி சிக்கிக் கொண்டார்.

நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கினார். அருகில் இருந்த உறவினர் அவரை காப்பாற்ற முயன்றும் முடிய வில்லை.

சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி மணி பரிதாபமாக இறந்தார். அவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், 2 மாத பெண் குழந்தையும் உள்ளது.

இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News