உள்ளூர் செய்திகள்

பேஸ்புக் மூலம் காதல்- இளம்பெண்ணை ஏமாற்றியதாக வாலிபர் மீது புகார்

Published On 2022-06-25 06:25 GMT   |   Update On 2022-06-25 06:25 GMT
  • கோவையை சேர்ந்த கோபி என்பவர் எனக்கு பேஸ்புக் மூலமாக அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம்.
  • திருமணம் செய்வதாக உறுதி அளித்து என்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய கோபி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை:

கோவை நியூசித்தாபுதூர் சின்னசாமி நாயுடு வீதியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நான் ஊழியராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.

கடந்த 2017-ம் ஆண்டு கோவையை சேர்ந்த கோபி (32) என்பவர் எனக்கு பேஸ்புக் மூலமாக அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம்.

பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசி வந்தோம். நாளடைவில் அது எங்களுக்குள் காதலாக மாறியது. அவர் என்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்தார்.

அவரது பேச்சை உண்மை என நம்பினேன். இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு எனது வீட்டிற்கு அவர் வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அவர் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதேபோன்று அடிக்கடி தனிமையில் இருவரும் சந்தித்து வந்தோம். பின்னர் நான் அவரிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றேன்.

ஆனால் அதன் பின்னர் அவர் என்னிடம் பேசுவதையும், என்னை பார்ப்பதையும் தவிர்த்தார். மேலும் என்னுடனான தொடர்பையும் கைவிட்டார்.

எனவே திருமணம் செய்வதாக உறுதி அளித்து என்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய கோபி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் கோபி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News