உள்ளூர் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-11-06 15:40 IST   |   Update On 2023-11-06 15:40:00 IST
  • கிருஷ்ணகிரி அருகே இளம் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே கே.திப்பனபள்ளியில் உள்ள சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் திலகவதி (வயது24).

சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் விரக்தி அடைந்த திலகவதி கடந்த மாதம் 21-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதனை கண்ட அவரது உறவினர்கள் திலகவதியை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து குருபரப் பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News