உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வடமதுரை அருகே மின்கம்பத்தில் மோதி வாலிபர் பலி

Published On 2022-09-08 05:05 GMT   |   Update On 2022-09-08 05:05 GMT
  • சத்திரப்பட்டி பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர மின்கம்பத்தில் மோதியது.
  • இந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே குஜிலியம்பாறை முத்தம்பட்டியை சேர்ந்தவர் பிரேம்குமார்(32). இவருக்கு சுந்தரதேவி என்ற மனைவி, 2 மகன்களும் உள்ளனர்.

கொத்தனார் வேலை பார்த்துவந்த பிரேம்குமார் மோட்டார் சைக்கிளில் அரவக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். சத்திரப்பட்டி பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர மின்கம்பத்தில் மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News