உள்ளூர் செய்திகள்
உறவினர் விசேசத்திற்கு வந்த வாலிபர் கிணற்றில் மூழ்கி சாவு
- விசேசத்திற்கு வந்த வாலிபர் கிணற்றில் குளிக்கசென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் ராஜதானி அருகில் உள்ள அம்மாபட்டி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சமயராஜ் மகன் அருணாச்சலம் (வயது 26).
இவர் சம்பவத்தன்று தனது உறவினர்வீட்டு வசந்த விழாவிற்காக வேலப்பர் கோவில் சென்றார். அங்குள்ள கிணற்றில் குளிக்க முயன்ற போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சவுந்திர பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.