உள்ளூர் செய்திகள்

கைதான சரவணபாண்டியன்.

வடமதுரை அருகே கத்திமுனையில் பணம் பறித்த வாலிபர் கைது

Published On 2022-09-27 07:43 GMT   |   Update On 2022-09-27 07:43 GMT
  • கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மது குடிக்க பணம் கேட்டு பாக்கெட்டில் இருந்த பணத்தை வாலிபர் பறித்துச்சென்றார்..
  • புகாரின் பேரில் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வடமதுரை:

வடமதுரை அருகில் உள்ள தும்மணக்குண்டு பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 25). இவர் நேற்று தனது வீட்டு அருகே நடந்துசென்று கொண்டிருந்தார்.

அப்போது தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணபாண்டியன் (27) என்பவர் கழுத்தில் கத்தியை வைத்து மது குடிக்க பணம் தருமாறு கேட்டார்.

அவர் பணம் தர மறுக்கவே விவேகானந்தன் பாக்கெட்டில் இருந்த ரூ.900 பணத்தை பறித்துக் கொண்டார். அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் பணத்தை திருடிய அந்த வாலிபர் தான் வந்த பைக்கை அதே இடத்தில் விட்டு விட்டு ஓடிவிட்டார்.

இது குறித்து வடதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணபாண்டி யனை கைது செய்தனர்.

Tags:    

Similar News