உள்ளூர் செய்திகள்

இளம்பெண் கடத்தல்

Published On 2023-06-13 09:41 GMT   |   Update On 2023-06-13 09:41 GMT
  • வீட்டைவிட்டு வெளியே சென்றார். அவர் மீண்டும் திரும்பிவரவில்லை.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜோட்டிகுமாரியையும், ரகுல்சவுத்ரியையும் தேடிவருகின்றனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முல்லை நகரைச் சேர்ந்தவர் ராம்பள்ளி சவுத்ரி. இவரது மனவைி புல்மாசியா தேவி. இவரது மகள் ஜோட்டி குமாரி (வயது21). இவர் அதே பகுதியில் உள்ள கார்மெண்ட்சில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 4-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றார். அவர் மீண்டும் திரும்பிவரவில்லை. இதுகுறித்து பெண்ணின் தாயார் புல்மாசியாதேவி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரகுல் சவுத்ரி என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜோட்டிகுமாரியையும், ரகுல்சவுத்ரியையும் தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News