உடல் நிலை பாதிப்பால் இளம்பெண் தற்கொலை
- பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை.
- மனமுடைந்த மம்தா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி,
கர்நாடக மாநிலம் கபயன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மம்தா (வயது 20). இவர்கள் தேன்கனிக்கோட்டை பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மம்தாவுக்கு சமீப காலமாக உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இதில் மனமுடைந்த மம்தா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை சிவப்பா தந்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி 7 ஆண்டுக்குள் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து டி.எஸ்.பி.முரளி விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல காவேரிபட்டணம் அய்யப்பன்கொட்டாய் பகுதியைசேர்ந்த முருகன் என்பவரது மகள் பூவரசி (15) என்ற 10-ம் வகுப்பு மாணவியும் தீராத வயிற்றுவலியால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவேரிபட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.