உள்ளூர் செய்திகள்

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரியில் யோகா தின விழா

Published On 2023-06-21 08:49 GMT   |   Update On 2023-06-21 08:49 GMT
  • விரிவுரையாளர்கள் நிலா, அரவிந்த் ஆகியோர் யோகா பயிற்சியின் அவசியம் குறித்து எடுத்துக் கூறினர்.
  • மாணவர் அமுதன் யோகாசனங்களை செய்து காட்டினார்.

சிவகிரி:

வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரியில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தாளாளர் எஸ்.டி. முருகேசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் காளிசெல்வி வரவேற்று பேசினர்.

நிகழ்ச்சியில் எஸ். தங்கப்பழம் இயற்கை மற்றும் யோகா அறிவியல் மருத்துவ கல்லூரி விரிவுரையாளர்கள் நிலா, அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியின் அவசியம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர். தொடர்ந்து மாணவர் அமுதன் யோகாசனங்களை செய்து காட்டினார். நிகழ்ச்சியில் கல்லூரி உதவி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News