உள்ளூர் செய்திகள்

சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

சாலையில் அமர்ந்து சமையல் செய்து பெண்கள் போராட்டம்

Published On 2022-10-07 07:21 GMT   |   Update On 2022-10-07 07:21 GMT
  • போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் பூங்கொடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
  • போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உட்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாபநாசம்:

பாபநாசம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், குப்பைமேடு பகுதியில் சுகாதார வளாகத்துடன் கூடிய சமுதாயக்கூடம், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நகரச் செயலாளர் சங்கர் தலைமையில் ஒன்றிய செயலாளர் முரளிதரன், மாவட்ட குழு உறுப்பினர் காதர் உசேன் முன்னிலையிலும் பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு, சமையல் பாத்திரங்களை கொண்டு வந்து சமைத்தவாறு, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் பூங்கொடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர் கலைவாணி போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உட்பட 43 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News