உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலியான அம்மையத்தாள்

திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி

Published On 2022-07-15 07:59 GMT   |   Update On 2022-07-15 07:59 GMT
  • அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் படுகாயமடைந்த பெண் பலியானார்.
  • திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் நல்லாம்பட்டி அருகே என்.பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். அவரது மனைவி அம்மையத்தாள் (வயது 45). இவர் திண்டுக்கல் நாகல்நகரில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு காய்கறி வியாபாரத்தை முடித்துவிட்டு அவரது சகோதரர் வெள்ளைச்சாமி என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் நாகல் நகர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அம்மையத்தாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News