உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு முகாம்
- சிவகாசி அருகே காசநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- டெங்கு காய்ச்சல் பரவும் விதம் மற்றும் கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
சிவகாசி
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மத்திய சேனை கிராமத்தில் உள்ள மெப்கோ பொறியியல் கல்லூரியில் டெங்கு மற்றும் காசநோய் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது.
இதில் பேராசிரியர்களுக்கு காசநோய் உள்ளதா என்று 12 பேரிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் டெங்கு காய்ச்சல் பரவும் விதம் மற்றும் கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும் எடுத்துக்கூறினர்.
காசநோய் நலகல்வியாளர் சந்திரசேகர், காசநோய் ஒருங்கிணைப்பாளர் டேனியல், வீரபாண்டி மற்றும் வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.