உள்ளூர் செய்திகள்

100 நாள் வேலை திட்டம் குறித்து புகார்கள்

Published On 2022-08-16 07:57 GMT   |   Update On 2022-08-16 07:57 GMT
  • 100 நாள் வேலை திட்டம் குறித்த புகார்களை தெரிவிக்க கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை அணுகலாம்.
  • இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனி நபர் சார்ந்த பணிகள், சமுதாயம் சார்ந்த கட்டிடப் பணிகள் மற்றும் இதர பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 100 நாட்களுக்கு பணி வழங்கப்பட்டு, திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் தொடர்பான குறைபாடுகள், பணித்தளங்களில் வேலை தொடர்பான புகார்கள், பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பிற புகார்களை பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் இலவச அழைப்பு எண்: 04562-252910 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News