உள்ளூர் செய்திகள்

போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-09-22 07:52 GMT   |   Update On 2022-09-22 07:52 GMT
  • விருதுநகரில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா பேரணியை ெதாடங்கி வைத்தார்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் ராஜபாளையம் கிளை சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது. வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா பேரணியை ெதாடங்கி வைத்தார். கிளை தலைவர் ஜான் பாட்ஷா தலைமை தாங்கினார். இதில் பங்கேற்றவர்கள் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். மாநில பேச்சாளர் முகம்மது ஷபீக் சிறப்புரையாற்றினார். நகர செயலாளர் காஜாமைதீன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News