உள்ளூர் செய்திகள்

பாரம்பரிய கலை விழா

Published On 2022-12-18 08:19 GMT   |   Update On 2022-12-18 08:19 GMT
  • பாரம்பரிய கலை விழா நடந்தது.
  • ஆசிரியை சுமதி, மாணவி முத்து ஜீவனா ஆகியோர் பாரம்பரிய கலைகளை பற்றி எடுத்துரைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் தமிழரின் பாரம்பரிய கலை விழா நடந்தது. தமிழர்களுக்கே உரித்தான ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் இன்னர்வீ=ல் சங்க தலைவி சத்யா குப்புசாமி, ரோட்டரி சங்க தலைவி டாக்டர்.ராதா ஆகியோர் பங்கேற்றனர். மாணவி பிரதீபா வரவே

பள்ளி குழுமத்தலைவர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ரா குமரேசன், துணை நிர்வாகி அரவிந்த் குமரேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். முதல்வர் அனுசுயா, துணை முதல்வர் சவுந்திரபாண்டி என்ற சவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்தனர். ஆசிரியை சுமதி, மாணவி முத்து ஜீவனா ஆகியோர் பாரம்பரிய கலைகளை பற்றி எடுத்துரைத்தனர். மாணவர்களின் குழு நடனம் நடந்தது. மாணவி செல்வபிரியா நன்றி கூறினார்.

Tags:    

Similar News