உள்ளூர் செய்திகள்

பர்னிச்சர் கடையில் புகுந்து ரூ.45 ஆயிரம் கொள்ளை

Published On 2022-06-06 08:52 GMT   |   Update On 2022-06-06 08:52 GMT
  • விருதுநகரில் பர்னிச்சர் கடையில் புகுந்து ரூ.45 ஆயிரம் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
  • கடைக்குள் புகுந்து கல்லாப்பெட்டியை திறந்து பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.

விருதுநகர்

விருதுநகர் பராசக்தி நகரைச் சேர்ந்தவர் செல்வவராஜ் (வயது 45). இவர் அேத பகுதியில் உள்ள தந்திமாடத்தெரு, நேருஜி வீதி ஆகிய பகுதிகளில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.

தந்திமாடத்தெருவில் உள்ள பர்னிச்சர் கடையில் ராமலட்சுமி என்பவர் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இந்த கடையில் உள்ள கல்லாப்பெட்டியில் ரூ. 45 ஆயிரத்தை வைத்து விட்டு செல்வராஜ் வெளியே சென்று விட்டார்.

இந்த நிலையில் கல்லாப்பெட்டியில் இருந்த பணம் திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர் உடனே செல்வராஜூக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த அவர் கடையில் பொருத்தப்ப ட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது பட்டப்பகலில் மர்ம நபர் கடைக்குள் புகுந்து கல்லாப்பெட்டியை திறந்து பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.

இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News