உள்ளூர் செய்திகள்

சிவகாசி மாநகராட்சி புதிய அலுவலக கட்டிட கட்டுமான பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மாநகராட்சி புதிய கட்டிட பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

Published On 2023-10-09 09:09 GMT   |   Update On 2023-10-09 09:09 GMT
  • சிவகாசியில் மாநகராட்சி புதிய கட்டிட பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
  • துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் சிவகாசி மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வரு கிறது.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தலைமையில் அமைச் சர்கள் நேரு, சாத்தூர் ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த னர். அப்போது அமைச்சர் கள் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்க ளுக்கு எளிதிலும், விரை வாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் முதல்-அமைச்சர் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை செயல்படுத்தி வருகிறார்கள்.

மேலும் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவி களை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரம மின்றி பணிபுரிய வசதியாக வும் பல்வேறு நிதித்திட்டங் களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதி களுடன் கூடிய அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

இந்த புதிய கட்டிட பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் அரசு நிர்ண யம் செய்யப்பட்டுள்ள காலக்கட்டத்திற்குள் விரைந்து முடித்து, பயன் பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆய்வின்போது தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் அசோகன், சீனிவாசன், தங்கபாண்டி யன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், சிவகாசி மாநக ராட்சி துணை மேயர் விக்னேஷ்பிரியா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் விவேகன் ராஜ், மாமன்ற உறுப்பி னர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News