உள்ளூர் செய்திகள்

தொழில் முனைவோர் அரங்கம் திறப்பு

Published On 2023-10-22 06:39 GMT   |   Update On 2023-10-22 06:39 GMT
  • கலசலிங்கம் பல்கலையில் தொழில் முனைவோர் அரங்கம் திறப்பு விழா நடந்தது.
  • இயக்குநா் டெனி, துறைத்தலைவா் சந்திரசேகா் ஆகியோர் செய்திருந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்

ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலையில் வணிக நிர்வாகத்துறை சார்பில் தொழில் முனைவோர் அரங்கம் திறப்பு விழா நடந்தது. பல்கலைக்கழக துணைத்தலைவா் சசிஆனந்த் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலா் தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்குநா் உமாசங்கா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரங்கை திறந்து வைத்தார்.

அங்கு மாணவர்கள் அமைத்திருந்த கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். துணைவேந்தா் நாராயணன், பதிவாளா் வாசு தேவன், டி.ஐ.ஆா். சரசு, முதல்வர் கணேசன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐ.இ.டி.சி. இயக்குநா் டெனி, துறைத்தலைவா் சந்திரசேகா் ஆகியோர் செய்திருந்தனா்.

Tags:    

Similar News