உள்ளூர் செய்திகள்

கார்பன் சமநிலை ராஜபாளையம் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்து கையேட்டை வெளியிட்டனர்.

விருதுநகர்-ராமநாதபுரம் மாவட்டங்களில் காற்று மாசை குறைக்க நடவடிக்கை-அமைச்சர்

Published On 2023-08-31 12:55 IST   |   Update On 2023-08-31 12:55:00 IST
  • விருதுநகர்-ராமநாதபுரம் மாவட்டங்களில் காற்று மாசை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅமைச்சர் கூறினார்.
  • ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் சார்பில் "கார்பன் சமநிலை ராஜபாளையம்" என்னும் புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹீ, சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் தீபக் பில்ஜி, துணை இயக்குநர் (ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திலீப் குமார், தனுஷ் குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் "கார்பன் சமநிலை" என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 38 மாவட்டங்களிலும் காலநிலை மாற்ற இயக்கங் கள் அமைக்கப்பட்டுள்ளன.முன்னோடி மாவட்டங்க ளான கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட் டங்களை தேர்ந்தெடுத்து கார்பன் சமன்படுத்தப்பட்ட காலநிலை ஸ்மார்ட் மாவட்டம், நகர செயல் திட்டங்களை உருவாக்கி நிறுவனங்களின் பங்களிப்பு டன் காற்று மாசை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படு கிறது.

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கார்பன் சமநிலை பயிற்சி பட்டறைகளுக்கு பிறகு மாநிலத்தின் வரிசையில் 3-தாக நடைபெற்ற "கார்பன் சமன்படுத்தப்பட்ட ராஜபாளையம்" திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

காற்று மாசை குறைப்பதற் கான தீர்வுகளை வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். காலநிலை மாற்றத்தால் பருவங்கள் மாறி வருகின்றன. சரியான நேரத்தில் மழை பொழிவு இல்லாமலும், பருவநிலை இல்லாத நேரத்தில் மழை பெய்வதுமாக இருக்கின்றது. இந்த காலநிலை மாற்றத்திற்கு காரணம் நாம் தான். அனைவரும் நமது வீட்டில் ஒரு மரமாவது வளர்க்க வேண்டும். நம்முடைய எதிர்கால சந்ததியினர்களுக்கு நல்ல உலகத்தை விட்டு செல்வதற்கான உறுதி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசி னார்.

இந்நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி, காலநிலை மாற்ற ஆளுகைக் குழு உறுப்பினர் நிர்மலா ராஜா (ராம்கோ நிறுவனம்), மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பேச்சியம்மாள், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் ராமராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விசாலாட்சி, ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News