உள்ளூர் செய்திகள்

இ.சி.இ. துறைக்கு தேசிய அங்கீகாரம்

Published On 2023-01-01 08:39 GMT   |   Update On 2023-01-01 08:39 GMT
  • கலசலிங்கம் பல்கலைக்கழக இ.சி.இ. துறைக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்தது.
  • டீன்கள், மற்றும் பணியாளர்கள், அலுவலர்கள், டெக்னீசியன்ஸ் ஆகியோரின் செயல்பாடுகளை் பாராட்டினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

தேசிய அங்கீகார வாரியம் (என்.பி.ஏ) அடுக்கு-1, வாஷிங்டன், அக்கார்டு அமைப்பின் கீழ் 2-வது முறையாக, மறு அங்கீகார ஆய்விற்கு, உயர்கல்வி நிறுவனங்களின் மூத்த பேராசிரியர் குழு கடந்த மாதம் கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்தது. 3 நாள் நடத்திய ஆய்வு அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்ஸ் துறைக்கு மிக உயர்ந்த 6 ஆண்டுகள் அங்கீகார அந்தஸ்தையும், பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் துறைக்கு 3 ஆண்டு அங்கீகார அந்தஸ்தையும் வழங்கி பாராட்டியது.

இதனால் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சர்வதேச அளவில் உயர்படிப்பும், வேலை வாய்ப்பும் எளிதாக கிடைக்கும். பல்கலைக்கழக வேந்தர், கே.ஸ்ரீதரன், இணை வேந்தர் எஸ்.அறிவழகி, துணை தலைவர்கள் எஸ்.சசிஆனந்த், எஸ்.அர்ஜூன்கலசலிங்கம், பதிவாளர் வி.வாசுதேவன் ஆகியோர் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்று சாதனை புரிந்த பேராசிரியர்கள், துறை தலைவர்கள், இயக்குநர்கள், டீன்கள், மற்றும் பணியாளர்கள், அலுவலர்கள், டெக்னீசியன்ஸ் ஆகியோரின் செயல்பாடுகளை் பாராட்டினர்.

Tags:    

Similar News