உள்ளூர் செய்திகள்

சாலையை சீரமைக்க பா.ம.க. கோரிக்கை

Published On 2022-07-17 08:26 GMT   |   Update On 2022-07-17 08:26 GMT
  • சாலையை சீரமைக்க பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது.
  • மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த சாலையை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

சிவகாசி

சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள பிள்ளைக்குழி (மயானம்) பகுதியில் உள்ள மண்சாலை முற்றிலுமாக சேதமடைந்து உள்ளது.இந்தசாலை 3 கிலோமீட்டர் தூரம் சென்று மெயின் ரோட்டை அடையும். இந்தப்பகுதி முழுவதும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி ஆகும்.

எனவே இந்த சாலை முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை மாநகராட்சி நிர்வாகம் உரிய முறையில் பராமரிக்காததால் இந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள்அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மின்விளக்குகள் வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இந்தப் பகுதிகளில் அதிக அளவில் குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த சாலையை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News