உள்ளூர் செய்திகள்

வடலூரில் துணிகரம் :வீடு புகுந்து நகை- பணத்தை திருடிய கொள்ளையர்கள்.

Published On 2023-02-10 10:17 GMT   |   Update On 2023-02-10 10:17 GMT
அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் மாமனாரின் வீட்டில் விருத்தாச்சலத்தில் தங்கியுள்ளார்,

கடலூர்:

கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் பகுதியில் வாகீசம்பிள்ளை நகரை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் கிருஷ்ணராஜ். இவர் நெய்வேலி டவுன்ஷிப்பில் கார் உதிரி பாகங்கள் விற்பனை கடை சொந்தமாக வைத்துள்ளார்கிருஷ்ணராஜ் மனைவிக்கு குழந்தை பிறந்து 4 மாதம் ஆன நிலையில் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் மாமனாரின் வீட்டில் விருத்தாச்சலத்தில் தங்கியுள்ளார்நேற்று காலை வேலு அவரது மனைவியும் தனது சொந்த ஊரான ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டையில் உள்ள விவசாய விளை நிலங்களை பார்ப்பதற்காக வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து மாலை 4:30 மணிக்கு திரும்பி அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்து போது பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 5பவுன் நகை, 14,000பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து வடலூர் போலீ ஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News