உள்ளூர் செய்திகள்

லாரி-பைக் விபத்தில் தொழிலாளி சாவு

Published On 2022-11-09 09:57 GMT   |   Update On 2022-11-09 09:57 GMT
  • நேருக்கு நேர் மோதிக்கொண்டது
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள பண்டபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 30) கூலி வேலை செய்து வருகிறார்.

நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் பண்டப்பல்லியில் இருந்து பரதராமி செல்ல பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாமிரெட்டிபல்லி கிராமம் தனியார் கல்லூரி அருகே வரும்போது ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து தாதுமணல் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்ற லாரியும்-பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் விரைந்து வந்து சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News