உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவியிடம் செயின் பறித்த கொள்ளையர்களை பிடிக்க தீவிரம்

Published On 2022-12-20 15:38 IST   |   Update On 2022-12-20 15:38:00 IST
  • சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் ஆய்வு

குடியாத்தம்:

குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி பாண்டியன் நகர் அடுத்த ஜெய் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் பி.எச்.இமகிரிபாபு அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஆகவும், குடியாத்தம் நில வங்கி தலைவராகவும், அப்பகுதி ஒன்றிய குழு உறுப்பினராகவும் உள்ளார்.

இவரது மனைவி மமதா (வயது 40) இவர் ராஜா குப்பம் ஊராட்சி மன்ற தலைவராகவும் குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் ஊராட்சி மன்ற தலைவர் மமதா தனது வீட்டின் வெளியே அக்கம் பக்கத்தினர் உடன் பேசிக்கொண்டிருந்தார் அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரண்டு மர்ம நபர்கள் மமதா அருகே வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தில் இருந்த 8 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சி யடைந்த மமதா பீவி கூச்சலிட்டு ள்ளார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் ஹெல்மெட் கொள்ளை யர்கள் கண்ணி யமைக்கும் நேரத்தில் தப்பிவிட்டனர்.

இது குறித்து உடனடியாக குடியாத்தம் நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் செயின் தாலி செயின் பறிப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த ஹெல்மெட் கொள்ளையர்கள் செயின் பறித்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News