உள்ளூர் செய்திகள்

மாடு முட்டி முதியவர் சாவு

Published On 2023-10-19 13:47 IST   |   Update On 2023-10-19 13:47:00 IST
  • அகத்திக்கீரை கொடுத்தபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

சத்துவாச்சாரி, ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 65). கடந்த 14-ந் தேதி மஹாளய அமாவாசையை முன்னிட்டு சேகர் மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுத்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சேகரை மாடு முட்டி தூக்கி எறிந்தது. இதில் சேகர் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக சேகரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News