பாதிரியார் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை
- கதவுகளை உடைத்து துணிகரம்
- மர்மகும்பல் குறித்து விசாரணை
வேலூர்:
பேரணாம்பட்டை அடுத்த எம்.வி.குப்பம் - புதூர் கிரா மத்தை சேர்ந்தவர் வில்சன் டேவிட் (வயது 55).
இவர் கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரி யாராக உள்ளார். இவரது மனைவி இவாஞ்சலின் மின்னி ( 50 ) , ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை ஆசிரியை இவாஞ்ச லின் மின்னி வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். பாதிரியார் வில்சன் டேவிட் , அவரது மகன் மீகா ( 22 ) ஆகியோர் காலை 11 மணி யளவில் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றிருந்தனர்.
பின்னர் சில மணி நேரம் கழித்து மகன் மீகா வீடு திரும் பினார் . கேட்டை திறந்த போது வீட்டின் முன்பக்க மற்றும் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்ற போது அறையில் பீரோக் களில் வைக்கப்பட்டிருந்த 3 நெக்லஸ்கள், 6 வளையல்கள் , ஒரு ஆரம் உள்பட 30 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு , சப் - இன்ஸ்பெக் டர் பிரபாகரன் மற்றும் மேல் பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி னர் . வேலூர் கைரேகை மற்றும் தடவியல் நிபுணர் லலிதா சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய் தார் . வேலூரிலிருந்து மோப்ப நாய் சிம்பா வரவழைக்கப்பட்டது.
தனிப்படை அமைப்பு
திருட்டு நடந்த இடத்தை மீண்டும் மீண்டும் சுற்றி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. நகையை திருடிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த மற்ற துணிகள் ஏதும் சிதறாமல் தங்க நகைகளை மட்டுமே நோட்டமிட்டு கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.12 லட்சம் என கூறப்படுகிறது.
மர்ம கும்பல் பாதிரியார் வீல் சண்டேவிட் வீட்டின் வெளி கேட் பூட்டை உடைக்காமல் சுவர் ஏறி குதித்து முன் பக்கம் மற்றும் பின் பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்று கைவரிசை காட்டி இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மேல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாதிரியார் வீட்டில் நகை கொள்டிளையடித்த கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.