வேலூர் கோர்ட்டு அருகே வக்கீல்கள் உண்ணாவிரதம்
- 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- முறையாக சட்டம் படித்தவர்களை மட்டும் வழக்கறிஞர்களாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்
வேலூர்:
வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அருகே 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
பார் அசோசியேஷன் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். வக்கீல்கள் பாலச்சந்தர் ரவி பாஸ்கரன், உலகநாதன், ராஜ்குமார், காஞ்சனா சுமதி, காலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தொழில் செய்யும் இடங்களில் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருவதால் அவர்களது உயிருக்கும் உரிமைக்கும் பாதுகாப்பு இல்லை வழக்கறிஞர்கள் சுதந்திரமாக தொழில் செய்ய மத்திய மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் வழக்கறிஞர்களுடைய சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
வழக்கறிஞர்களின் நலனை பாதுகாக்கும் விதத்தில் ஜூடிசியல் அக்கவுண்டபிலிட்டி கமிட்டி ஒன்றை உருவாக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுக் கொள்வது, முறையாக சட்டம் படித்தவர்களையும் மட்டும் வழக்கறிஞர்களாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் முறையற்ற முறையில் வெளி மாநிலங்களில் சட்டப்படிப்பு முடித்ததாக கொண்டுவரப்படும் சான்றிதழ் சரி பார்ப்பினை மிகவும் கடுமையாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.