உள்ளூர் செய்திகள்

பட்டாசு வெடித்ததில் டிரைவர், தொழிலாளி படுகாயம்

Published On 2023-02-27 10:06 GMT   |   Update On 2023-02-27 10:06 GMT
  • சவ ஊர்வலத்தின்போது விபரீதம்
  • பலத்த தீ காயம் அடைந்தனர்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தில் நேற்று சவ ஊர்வலம் நடைபெற்றது.

அப்போது சிலர் பட்டாசுகளை கொளுத்தி தூக்கி வீசியுள்ளனர். அப்போது அந்த வண்டியில் இருந்த கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 32)டிரைவர், கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் நாகல் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி டில்லி பாபு (27) என்பவர்கள் மீது பட்டாசு பட்டத்தில் பலத்த தீ காயம் அடைந்தனர்.

Tags:    

Similar News