உள்ளூர் செய்திகள்
- குடும்பத்தினர் இடையே அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த புதூரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50) டிரைவர். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் பெருமாள் நேற்றும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த பெருமாள் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் இது குறித்து வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெருமாள் பிணத்தை மிட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.