உள்ளூர் செய்திகள்
தூய்மை பணியாளர்கள் கணக்கெடுப்பு பயிற்சி
- பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:-
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்களை அடையாளம் காணுதல் குறித்த கணக்கெடுப்பு பயிற்சி முகாம் பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
இதனை தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் அர்ச்சுனன், உமாராணி, ராமு, பரப்புரையாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.