மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கிய காட்சி.
பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
- மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
- குடியாத்தம் நகராட்சி சார்பில் நடந்தது
குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சி சார்பில் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவி களுக்கான தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம் எஸ் அமர்நாத் தலைமை தாங்கினார். நகர மன்ற உறுப்பினர்கள் இ.ஜாவித்அகமது, என். கோவிந்தராஜ், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ கிறிஸ்டி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன், நகர் மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாணவி களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.மாணவிகள் தூய்மையான நகரம் அதற்கான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியை சரளாதேவி, தூய்மை பாரதம் மேற்பார்வையாளர் ராஜேந்திரன், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் சாமுண்டீஸ்வரி, பென்னி, சதீஷ்குமார் உள்பட, பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் நன்றி கூறினார்.