உள்ளூர் செய்திகள்
- ஒடுகத்தூர் வனத்துறை பிடித்தனர்
- காப்பு காட்டில் விட்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பாக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரராஜா இவருக்கு செந்தமாக மாந்தோப்பு உள்ளது.
வழக்கம்போல இவர் மாந்தோப்பில் மாங்காய்களை பறிப்பதற்காக நேற்று மாலை மாந்தோப்பிற்கு சென்றுள்ளார்.
அப்போது சுமார் 8 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஊர்ந்து கொண்டு மா மரத்தின் அடியில் இருந்துள்ளது. இதனை பார்த்த தாமோதரன் அலறி அடித்து ஓடி உள்ளார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அருகே இருக்கும் ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் வருவதற்குள் மலைப்பாம்பு மாமரத்தில் ஏறியது.
பின்னர் வந்த ஒடுகத்தூர் வனத்துறை 40 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள சானாங்குப்பம் காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.