உள்ளூர் செய்திகள்

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

Published On 2023-10-15 14:33 IST   |   Update On 2023-10-15 14:33:00 IST
  • போதையில் மிரட்டி சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.1000 எடுத்து சென்றார்
  • போலீசில் புகார்

வேலூர்:

காட்பாடி தாலுகா கழிஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 43). கட் டிட மேஸ்திரி. இவர் சம்பவத் தன்று காகிதப்பட்டறையில் நடந்து சென்றபோது, வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த கணேசன் மகன் மணி (வயது 24) என்பவர் போதையில் தேவேந்திரனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டைப்பையில் வைத்திருந்த 1,000 ரூபாயை பறித்துச்சென்று விட்டார்.

இது குறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத் தில் தேவேந்திரன்' புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மணியை கைது செய் தனர். மேலும் அவரிடமிருந்த 1,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News