உள்ளூர் செய்திகள்

ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

வாசுதேவநல்லூரில் யூனியன் கூட்டம்

Published On 2023-03-04 13:20 IST   |   Update On 2023-03-04 13:20:00 IST
  • ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்திற்கு பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
  • கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகிரி:

வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்வி ஏசுதாஸ், ஜெயராம், பரமேஸ்வரி, அருணாதேவி பாலசுப்ரமணியன், விஜயபாண்டியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, லில்லி புஷ்பம், ஓவர்சீஸ் ராமசாமி, முத்துமாரி, அலுவலர்கள், பணியாளர்கள், சிலம்பரசன், உள்ளார் மணிகண்டன், விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News