உள்ளூர் செய்திகள்

ஏ.டி.எம்.மில் கூடுதலாக வந்த பணத்த ஒப்படைத்த இரட்டையர்கள்: போலீசார் பாராட்டு

Published On 2023-02-20 09:14 GMT   |   Update On 2023-02-20 09:14 GMT
  • மண்ணாங்கட்டி. இவரது மகன்கள் யுவநாதன், (22) யுவராஜ், (22) இரட்டையர்கள். இவர்கள், நேற்று மாலை ஒரு ஏ. டி. எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றனர்.
  • இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதிக பணம் வந்துள்ளதை கண்ட இரட்டையர்கள்.திண்டிவனம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்,

விழுப்புரம்:

ஏ. டி. எம்., இயந்திரத்தில் கூடுதலாக வந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சகோதரர்களை போலீசார் பாராட்டினர்விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது மகன்கள் யுவநாதன், (22) யுவராஜ், (22) இரட்டையர்கள். இவர்கள், நேற்று மாலை திண்டிவனம் புறவழிச்சாலை அருகே, தனியார் ஓட்டல் எதிரே உள்ள ஒரு ஏ. டி. எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றனர். யுவராஜ் வங்கி கணக்கில் ரூ. 3, 500 இருந்துள்ளது. அதில் இருந்து 500 ரூபாய் எடுக்க பட்டனை அழுத்தினார்.

ஆனால் யுவராஜ் வங்கி கணக்கில் ரூ. 3, 500 இருந்துள்ளது. அதில் இருந்து 500 ரூபாய் எடுக்க பட்டனை அழுத்தினார். ஆனால், 500 ரூபாய்க்கு பதில் ரூ. 10 ஆயிரம் வந்துள்ளதுயுவராஜ் மொபைல் போனுக்கு ரூ. 500 எடுத்ததாக குறுந்தகவல் வந்துள்ளது. ஏ.டி.எம்., இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதிக பணம் வந்துள்ளதாக கருதிய சகோதரர்கள், திண்டிவனம் போலீசில் 9 ஆயிரத்து 500 ரூபாயை ஒப்படைத்தனர். பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சகோதரர்களை போலீசார் பாராட்டினர்.

Tags:    

Similar News