உள்ளூர் செய்திகள்

திருச்சியில் இளம் பெண், கொத்தனார் மாயம்

Published On 2022-10-19 09:48 GMT   |   Update On 2022-10-19 09:48 GMT
  • அரியமங்கலம் நேருஜி நகர் செல்லையா தெருவை சேர்ந்தவர் கார்த்திகா(24).
  • கார்த்திகாவிற்கு அவருடைய பெற்றோர் திருமண நிச்சயம் செய்த நிலையில் கடந்த 13 ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

திருச்சி

அரியமங்கலம் நேருஜி நகர் செல்லையா தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது42) இவரது மகள் கார்த்திகா(24) பிஎஸ்சி படித்து முடித்துவிட்டு தஞ்சாவூரில் உள்ள ஒரு துணிக்கடையில் கடந்த ஐந்து மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கார்த்திகாவிற்கு அவருடைய பெற்றோர் திருமண நிச்சயம் செய்த நிலையில் கடந்த 13 ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து கார்த்திகாவின் தந்தை மகேந்திரன் அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி கருமண்டபம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பழனி அம்மாள். இவரது மகன் மணிகண்டன் (வயது38) கொத்தனாராக பணியாற்றி வருகிறார். கடந்த 15ந்தேதி மணிகண்டன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து பழனியம்மாள் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News