உள்ளூர் செய்திகள்

திருச்சியில் முதன்முறையாக சிக்னலில் கோடை பந்தல்

Published On 2023-05-21 07:51 GMT   |   Update On 2023-05-21 07:51 GMT
  • திருச்சியில் முதன்முறையாக சிக்னலில் கோடை பந்தல் அமைக்கபட்டது
  • திருச்சி தலைமை தபால்நிலையம் அருகில் உள்ள ரவுண்டானா சிக்னலில் கோடைப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது

திருச்சி:

தமிழகத்தில் அக்கினி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கோடை மழையுடன் தொடங்கினாலும், அதன்பிறகு வந்த நாட்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வெப்ப அலைகளை அள்ளித்தெளித்து வருகிறது. திருச்சியில் தினமும் 103 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வரும் நிலையில் வாகன ஓட்டிகள் வெயிலிலிருந்து தப்பிக்க தற்காலிக ஏற்பாடாக தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருச்சி தலைமை தபால்நிலையம் அருகில் உள்ள ரவுண்டானா சிக்னலில் கோடைப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


Tags:    

Similar News