உள்ளூர் செய்திகள்
துறையூர் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு
- துறையூர் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார்
- ஆய்வின்போது காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது
துறையூர்:
தமிழக காவல்துறையில் சம்பந்தப்பட்ட காவல் துறை சரகத் துணைத் தலைவர்கள் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வட்ட காவல் நிலையத்தை ஆய்வு செய்வது வழக்கம். இதனை ஒட்டி திருச்சி சரக துணை தலைவர் சரவண சுந்தர் துறையூர் வட்ட காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், கைதியறை, கணினி அறை, வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். மேலும் ஆய்வின்போது காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இந்த ஆய்வின்போது முசிறி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின், துறையூர் வட்ட காவல் ஆய்வாளர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர்கள் சந்திரகாந்த், முத்துசாமி உள்ளிட்ட காவலர்கள் உடனிருந்தனர்.