உள்ளூர் செய்திகள்

பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2023-03-02 08:54 GMT   |   Update On 2023-03-02 08:54 GMT
  • பழங்குடியினர் இன மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக இணையதளம் திறக்கப்பட்டுள்ளது.
  • மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

பழங்குடியினர் இன மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக இணையதளம் (https://tnadtwscholarship.tn.gov.in) திறக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகை கல்லூரிகளில் படிக்கும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்டதை சம்பந்தப்பட்ட கல்லூரி பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அதே போல் மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News