உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம் நடந்தது.

மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

Published On 2023-08-11 09:37 GMT   |   Update On 2023-08-11 09:37 GMT
  • விவசாயிகள் அனைவருக்கும் ஆடிப்பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.
  • முடிவில் விவசாயி சம்பந்தம் நன்றி கூறினார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு தோட்டக்க லைத்துறை அலுவலகத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமில் முன்னோடி விவசாயி வேதையன் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

இதில் துணை தோட்டக்கலை அலுவலர் செல்வராசு, தோட்டக்கலை துறையினர் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஜெயக்குமார், தீபா, ராமஜெயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் விவசாயி சம்பந்தம் நன்றி கூறினார்.

இதில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் ஆடிப்பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News