உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம் நடந்தது.

வர்த்தகர்கள் பாதுகாப்பு நலச்சங்க கூட்டம்

Published On 2023-10-13 09:14 GMT   |   Update On 2023-10-13 09:14 GMT
  • தடுப்பணை கட்டி தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
  • தண்ணீரை தேக்கி உணவு தானிய உற்பத்தியை பெருக வேண்டும்.

சீர்காழி:

சீர்காழியில் வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில்பொறுப்பாளர்கள்ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஞானமணி தலைமை வகித்தார்.

செயலாளர் சத்யநாராயணன், பொருளாளர் வெங்கட்ராஜ், கௌர வதலைவர் கார்த்தி கேயன், ஆலோசகர் சேதுராமன், இளங்கோவன், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத கர்னாடக அரசை கண்டித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

வரும் காலத்தில் இது போன்ற தண்ணீர் பிரச்சனை ஏற்படாத வகையில் கூடுதலாக தடுப்பணைகளை தமிழக அரசு கட்டவேண்டும்.

அவ்வாறு தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்கி உணவு தானிய உற்பத்தியை பெருக்கிடவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.

Tags:    

Similar News