உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூரில் சாரல் மழை

Published On 2022-07-11 14:56 IST   |   Update On 2022-07-11 14:56:00 IST
  • பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் திடீரென சாரல் மழை
  • நீண்ட இடைவெளிக்கு பின் மழை பெய்ததால் குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பாலப்பட்டி, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணாநகர், சேளூர், சாணார்பாளையம், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளை யம், கொத்தமங்கலம், ஜமீன் இளம் பள்ளி, சோழசிராமணி, சுள்ளிப்பாளையம், பெருங்குறிச்சி, மணியனூர், கந்தம்பாளையம், நல்லூர், ஒத்தக்கடை, பரமத்தி, கபிலர்மலை, மோகனூர், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

அதனை தொடர்ந்து மழை வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இரவில் நீண்ட நேரம் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அதேபோல் இன்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்தது.இதனால் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே சென்றனர்.

அதேபோல் சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த கட்டில் கடைக்காரர்கள், பலகாரக் கடைக்காரர்கள், பழ கடைக்காரர்கள், டிபன் விற்பனை செய்யும் தள்ளுவண்டிக்காரர்கள், துணிக்கடைக்காரர்கள் விற்பனை செய்ய முடியாமல் பாதிப்படைந்தனர்.

நீண்ட இடைவெளிக்கு பின் மழை பெய்ததால் குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்ததால் பயிர்கள் நல்ல வளர்ச்சி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News