உள்ளூர் செய்திகள்

நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை

Published On 2023-01-18 15:17 IST   |   Update On 2023-01-18 15:17:00 IST
  • திருச்செங்கோடு மற்றும் காவிரி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் தக்காளி செடி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
  • இங்கு விளையும் தக்காளி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் காவிரி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் தக்காளி செடி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் தக்காளி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இதைத்தவிர சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூருவில் இருந்து தக்காளி ேலாடு சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்ற தக்காளி இன்று கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ரூ.20 அதிகரித்–துள்ளதால் இல்லதரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News