நெல்லையில் இன்று 8 பேருக்கு கொரோனா
- நெல்லையில் இன்று 8 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லை:
தமிழகம் உள்பட கொரோனா பாதிப்பு சில மாநிலங்களில் மீண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நெல்லையில் தினசரி பாதிப்பு சராசரியாக ஒரு நபருக்கு கண்டறியப்பட்டு வந்த நிலையில் இன்று 8 ஆக உயர்ந்துள்ளது.
மாநகர பகுதியில் மட்டும் தினமும் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை வெளியான பரிசோதனை முடிவில் மாவட்டம் முழுவதும் 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மாநகர பகுதியில் 3 பேரும், பாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 4 பேரும், ராதாபுரத்தில் ஒருவரும் அடங்குவர்.
இந்நிலையில் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றுவரை பாதிக்கப்பட்டவர்கள் அனை–வரும் ஏற்கனவே நெல்லை அரசு ஆஸ்பத்திரி–யில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.